தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கோடை மழை தொடங்கியுள்ளது!!
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கோடை மழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.மாஞ்சோலை மலைப் பகுதிகளிலும் கனமழை தொடர்கிறது. அதிதீவிர கனமழை மேல் கோதையார், முத்துக்குழிவயல், ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளது.மே மாதம் முழுவதும் தமிழகத்தின் கொங்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தை சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாலை நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பச்சலன மழையும் ஏற்படும்.
தென்காசி செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக