வேலூர் மாவட்டம் குடியாத்தில் கருப்பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர் திருவிழா!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம்  நெல்லூர்பேட்டை  பகுதியில் உள்ள பழமையான புகழ்பெற்ற கருப்புலீஸ்வரர் கோவிலில் சித்திரை   தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில்  இன்று சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெல்லூர்பேட்டை மாட வீதிகள் வழியாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் செளவுந்தர்ராஐன் கே.எம்.ஜி. ராஜேந்திரன். ஜே கே என் பழனி கே.எம். பூபதி எம் எஸ் அமர்நாத் அர்ச்சனா நவீன். பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர் மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் குடியாத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!