குடியாத்தம் பரதராமி அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த பூசாரி வலசை பகுதியில் வசிக்கும் மாணிக்கம்.த/பெ ரங்க கவுண்டர் நிலத்தில் உள்ள தரை கிணறு.( சீராந்தால் பட்டி )ஆந்திர மாநிலத்தில் இருந்து பனங்காய் வெட்டி சாப்பிட வந்த முச்சான்றியைச் (AP ) யாதமரி. பகுதியை சேர்ந்த ராமதாஸ் த/பெ ரமேஷ் வயது 20என்பவர்.கிணற்றில் குளிக்க சென்று உள்ளார் அப்போது கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.
தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக பரதராமி காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக