ஆதிதிராவிடருக்கு ஒரு சட்டம்… மற்றவர்களுக்கு வேறு சட்டமா? கொந்தளிக்கும் மக்கள்!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளிவாசலுக்கு செல்லும் பொதுவழியில் செல்வராஜ் என்ற நபர் தனிநபராக ஆக்கிரமிப்பு செய்து படிக்கட்டு அமைத்து, மேலும் சாலையில் போர்வெல் அமைத்து மோட்டார் பொருத்தி பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இத்தகைய ஆக்கிரமிப்பு இருந்தபோதிலும், நகராட்சி நிர்வாகம் அதை அகற்றாமல் அதே பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக அடிப்படையில் நடவடிக்கையா?
அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:
ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து அகற்றும் நகராட்சி நிர்வாகம், மற்ற சமூகத்தினரின் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.
மக்கள் எழுப்பும் கேள்விகள்:
• பொதுவழி ஆக்கிரமிப்புக்கு யார் பொறுப்பு?
• சட்டம் எல்லோருக்கும் சமமாக செயல்படுகிறதா?
• அதிகாரிகள் ஏன் மௌனமாக உள்ளனர்?
நடவடிக்கை கோரிக்கை:
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுவழியை மீட்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக