கோவை கவுண்டம்பாளையம் அடுத்த மஞ்சீஸ்வரி காலனி பகுதியில் உள்ள பி. எம்.ஏ நடுநிலை பள்ளியில் தனது வாக்கை செலுத்திய தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் !!
கோவை மாவட்டம்,தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், அடுத்த மஞ்சீஸ்வரி காலனியில் உள்ள பி. எம். ஏ நடுநிலைப் பள்ளியில், கோச்வை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில் சிலிண்டர் சின்னத்தில், போட்டியிட்ட தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் வேட்பாளர், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தனது வாக்கை தனது மனையுடன் வந்து செலுத்தினார். நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்திய அவர், தேர்தல் பணிகள் குறித்தும், வாக்கு பதிவுகுறித்தும் நேரில் பார்வையிட்டார் மேலும் தேர்தல் அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். பின்னர் தனது ஜனநாயக கடமையை யான வாக்குகளை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக