குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டவர் கைது!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் இவரது மகன் நந்தகோபால் . வயது 36 கட்டிடத் தொழிலாளி இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் கூலி தொழிலாளி பிரேம் என்பவருக்கும் இடையே முன் விரோத காரணமாக நேற்றைய முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது இதில் நந்தகோபாலை பிரேம்குமார் கத்தியால் குத்தி கொலை செய்தார். 

இதைத்தொடர்ந்து பிரேம்குமாரை கைது செய்ய வலியுறுத்தி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக  பாக்கம் கிராமம். அருகே பரதராமி சித்தூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் நடைபெற்றது இதில் 23 பேரை பரதராமி போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர் இந்நிலையில் நந்தகோபாலை பிரேம்குமார் கட்சியால் குத்திய போது ஏற்பட்ட தள்ளு. முள்ளில் பிரேம்குமார் கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. 

இதைக் குறித்து குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பிரேம்குமாரை தேடி வந்தனர் இந்த நிலையில் கையில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற பிரேம்குமார் தனது மனைவி சாந்தி உடன் நேற்று காலை குடியாத்தம் அரசு மருத்துவமனை சேர்ந்து உள்ளார். இதைப்பற்றி தகவல் கிடைத்தவுடன் தனிப்படை காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை சேர்ந்த . பிரேம்குமார் சிகிச்சை பிரிவுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டது இந்த.நிலையில் பிரேம்குமார் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீஸ் படையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். 

குடியாத்தம் செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!