தேசிய செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு காவல் நிலையத்தில் புகார்!!
அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய செயலாளராக அரக்கோணம் வெங்கடேசன் மோகன் நியமிக்கபட்டு உள்ளார். இவர் தனது கார் கண்ணாடியை யாரே உடைத்துவிட்டதாக நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார் அதில் அவர் கூறியதாவது ஐயா வணக்கம் நான் அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறேன் வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வந்த நான் நேற்று முன்தினம் மாலை அரக்கோணம் திரும்பினேன் நேற்று காலை வெளியே புறப்பட இருந்த போது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது என் அமைப்பின் மீது விரோதம் கொண்டவர்களா அல்லது என் மீது விரோதம் கொண்ட யாரோ இச்செயலை செய்திருப்பார் என்று கருதுகிறேன் எனவே காவல் விசாரணை செய்து தண்டிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை போக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன் இவ்வாறு மனுவில் தேசிய செயலாளர் வெங்கடேசன் மோகன் கூறியுள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக