வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டத்தில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் திருவிழா!!


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா- சிரசு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு  பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  பழமை வாய்ந்த கெங்கை அம்மன் கோவில் உள்ளது.ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15ஆம் தேதி கங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் வழக்கம் இந்த நிலையில் கீழ் ஆலத்தூர் கெங்கையம்மன் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் முதல் கெங்கை அம்மன் கோவில் திருவிழா என்பதால் குடியாத்தம் கே.வி.குப்பம் காட்பாடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து  ஏராளமான பொதுமக்கள் இந்த கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கலந்து  கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும்  பக்தர்கள் கெங்கைஅம்மனுக்கு மாவிளக்கு  கற்பூரம் ஏற்றியும் சூறைத்தேங்காய் உடைத்தும் கெங்கை அம்மனுக்கு நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர். கெங்கையம்மன் சிரசு திருவிழாவில்  பாரம்பரியமான  தாரை தப்பட்டை, மேளதாளங்களுடன் என  சிலம்பாட்டம், நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது மேலும் சிரசு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!