புனித வெள்ளி நிகழ்வையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை வழிபாடு!!
மதுரை : இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிறிஸ்தவர்கள் நினைவுகூறும் நாள் புனித வெள்ளி ஆகும். இன்று புனித வெள்ளி நிகழ்வையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை வழிபாடு. கிறிஸ்தவர்களின் தவக்கால அனுசரிப்பின் புனித நாட்கள், பெரிய வியாழன் நிகழ்வுடன் துவங்கியது. புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்நாளை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும், 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக