நான் போட்டியிடாதது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!!
நான் போட்டியிடாதது ஏன்? – திருமாவளவன் விளக்கம்! வரும் தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை வரும் என சந்தேகப்பட்டு நான் போட்டியிடுவதாக சொல்லப்படுகிற கருத்து தவறானது. என் நோக்கத்தை கொச்சைப்படுத்துகிற காரணத்தினால், என் நிலைப்பாட்டை தள்ளிவைக்கிறேன். என் யுக்தியை மாற்றி அமைக்கிறேன்.எனவே நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார்.பதவிக்காக நான் போட்டியிடவில்லை. நான் போட்டியிடுவதால், இந்தக் கூட்டணி வெற்றி பெறாது என்ற தோற்றத்தை உருவாக்குவது ஏற்புடையது அல்ல. 200 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.
_– விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி_
தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக