வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் அவர்கள் தீவிரவாக்குகள் சேகரிப்பு!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026 தனி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று காலை குடியாத்தம் நகர பகுதிகளில் தீவிர வாக்குகள் சேகரிப்பில். ஈடுபட்டார். முன்னதாக செதுக்கரை பகுதியில் உள்ள அருள்மி செல்வ விநாயகர் ஆலயத்தில் மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து பிரச்சாரத்தை துவங்கினார். பின்பு 13 வது .வார்டு ராஜிப்பட்டியில் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்களிக்க செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து காட்பாடி ரோடு எம்ஜிஆர் நகர் துப்புரவு காலனி ஆசிரியர் நகர் போன்ற பகுதிகளில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர் நகரகழக செயலாளர் ஜே கே என் பழனி மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா மூர்த்தி அமுதா . சிவபிரகாசம் முன்னாள் நகர செயலாளர் சேவல் நித்தியானந்தம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி. முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ், நகர துணை செயலாளர் அமுதா கருணா . கேவி ராஜேந்திரன், பாஜக நகரத் தலைவர் ஜெகன் ஸ்ரீகாந்த் ஸ்ரீதேவி ஜோதி ரேகா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக