கொடைக்கானலில் முதல்வர் பாதுகாப்பு பணியில் மது போதையில் இருந்த 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பாம்பார்புரம், தனியார் விடுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் கார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசார் மது போதையில் இருந்தனர்.
இதனை அறிந்த முதல்வரின் பாதுகாவலர்கள், திண்டுக்கல் சரக DIG.சசிமோகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து DIG.உத்தரவின் பேரில் S.P.பிரதீப் 3 போலீசாரையும் தேனி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக