குடியாத்தத்தில் 100% வாக்களிக்க கோரி அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் . சட்டமன்றத் தொகுதி தேர்தல் சம்பந்தமாக 100% வாக்களிக்க கோரி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து தலைமை தபால் நிலையம் வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர். ஷமீம் ரிஹானா தலைமை தாங்கினார்.
இதில் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி. சுபலட்சுமி உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான சந்தோஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக