தொகுதி பங்கீட்டால் NDA-வில் வெடித்த மோதல்கள்!!
தொகுதி பங்கீட்டால் NDA-வில் வெடித்த மோதல்கள்:
1. நாகர்கோவில் தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்கக் கோரி அதிமுக மகளிரணி போராட்டம்.
2. கோவை கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கக் கோரி பாஜக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
3. கும்பகோணம் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கியதை கண்டித்து போஸ்டர் ஒட்டி அதிமுகவினர் எதிர்ப்பு.
4. பழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கக் கோரி கட்சி அலுவலகம் முன் பாஜகவினர் தேங்காய் உடைத்து போராட்டம். தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு.
5. சோளிங்கர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு அமமுகவினர் எதிர்ப்பு.
6. ராமநாதபுரத்தை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிராக போஸ்டர் ஒட்டி அதிமுகவினர் கண்டனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக