அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கோலப் போட்டி!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக அறந்தாங்கியில் உள்ள 27 வார்டுகளில் கடந்த ஒருவாரமாக கோலப் போட்டி நடத்தப்பட்டது. அதில் சிறந்த கோலங்களை தேர்வு செய்து இன்று பேருந்து நிலையம் அருகே அவர்களுக்கு பரிசு பொருட்களை பாரதிய ஜனதா மகளிரணி சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.




கருத்துகள்
கருத்துரையிடுக