புதூரில் உற்சாகக் கொண்டாட்டம்: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அறிவிப்பை இனிப்புடன் கொண்டாடிய தொண்டர்கள்!!


மதுரை வடக்கு மாவட்டத்தின் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக விஜய் அன்பன் கல்லானை அறிவித்ததை தொடர்ந்து, புதூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் மற்றும் பொதுச் செயலாளர் இணைந்து வெளியிட்ட இந்த அறிவிப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான விஜய் அன்பன் கல்லானைக்கு ஆதரவாக புதூர் பஸ் ஸ்டாண்டில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற உறுதியாக பணியாற்றுவோம் என்ற உறுதியையும் தெரிவித்தனர்.புதூர் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், “தளபதி விஜயின் தலைமையில் கழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. விஜய் அன்பன் கல்லானை வெற்றி பெறச் செய்வது எங்கள் முதன்மை குறிக்கோள்” என்று தெரிவித்தனர்.

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!