தேர்தல் தேதி அறிவிப்பு: உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள்!!


அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.

நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு அரசு எந்த புதிய அறிவிப்பும் வெளியிட முடியாது.

அரசு சார்பில் ஏற்கனவே இருக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கலாம், புதிய பணிகளை தொடங்க முடியாது.

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க அரசு அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் களத்தில் இறங்கும்.

கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம்.

அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை வைக்கக்கூடாது - இந்திய தேர்தல் ஆணையம்.

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்படும்.

அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தரக்கூடாது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு கொண்டு மூடப்படும்.

சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படும்.

உரிய ஆவணங்களின்றி அதிகளவிலான பணம், நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியாது - இந்திய தேர்தல் ஆணையம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!