திருவண்ணாமலை அருகே மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் செங்கம் நகர ஒன்றிய மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி தலைமையில், மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேஸ் தட்டுப்பாடு, மற்றும் பெட்ரோல் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி இயல்பு நிலைக்கு திரும்பிட வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசை  எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பி,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் என சுமார்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!