விளாத்திகுளம் வழக்கில் ஒருவரை கைது செய்தது எப்படி? - மாவட்ட எஸ்.பி. மதன் விளக்கம்!!
விளாத்திகுளம் வழக்கு - மாவட்ட எஸ்.பி. மதன் விளக்கம்:
1. சம்பவம் நடந்த இடத்தில் CCTV இல்லையென்றாலும், சுற்று வட்டாரத்தில் இருந்த 98 CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய தனிப்படைகள் அமைத்தோம்.
2. 2,574 நம்பர்களுக்கான Call History பெற்று ஆய்வு செய்தோம்.
3. அப்பகுதியில் குற்றப் பின்னணியில் உள்ள 461 பேரிடம் விசாரணை செய்து, அவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்பதை உறுதி செய்ததுடன், கிராமத்தில் உள்ள 800 ஆண்களிடமும் தனியாக விசாரணை நடத்தினோம்.
4. எந்தவித அழுத்தமும் இல்லாமல், முற்றிலும் அறிவியல் பூர்வமான விசாரணையில் தர்ம முனீஸ்வரனை கைது செய்துள்ளோம்.
5. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்டுள்ளார். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக