இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு!!
இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் ஒரு அதிரடி நடவடிக்கையாக இன்று முதல் வாரம் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு கணிசமாக மிச்சமாகும் என்றும், போக்குவரத்து அழுத்தங்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக