தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் திருப்பணி வேலூர் மற்றும் குடியேற்றம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பின் நிறைவு விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் உலகத்திருவள்ளுவர் பேரவையின் தலைவர். வைர ஜெ.அன்பு தலைமை தாங்கினார்.
சாதனை கல்வி மையத்தின் தலைவர், திருக்குறள் திருப்பணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். பா சம்பத் குமார் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருக்குறள் மா.தி.சி குப்பன், முன்னாள் தமிழ் இயக்க நகரசெயலாளர் ஆசிரியர். தமிழ்செல்வன், நல்லாசிரியர்கள். மீனாட்சி,பார்வதி, சிவசங்கரி, குடியேற்றம் ஒன்றிய செயலாளர் முனைவர். மோ . மது, கிரீன்வேலி பள்ளி தாளாளர். ஆயிஷா ஜாவித், புலவர் முகம்மது அலி, கவிஞர் பைசல் அகமது திருக்குறள் செல்வராசு, பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் வெட்டுவானம் பாலாஜி உலகத்திருவள்ளுவர் பேரவையின் பொருளாளர் ஆசிரியர். ஜெய்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பெற்றோர்கள் , வேலூர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 50 பேரும் குடியேற்றம் சாதனை கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற 150 பேரும் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழ்கள் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சாதனை கல்வி மையத்தின் முதல்வர் ஆசிரியர். ஜமுனா சம்பத் குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக