தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாகனத்தை வழி மறித்து தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாகனத்தை வழிமறித்த அதிகாரிகள், அதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான சோதனை மேற்கொண்டனர். 

முதல்வரின் வாகனம் என்ற பாகுபாடின்றி தேர்தல் ஆணையத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையின் முடிவில் எவ்வித ஆட்சேபனைக்குரிய பொருட்களும் கண்டறியப்படாததைத் தொடர்ந்து, முதல்வரின் வாகனம் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!