அரக்கோணம் டாக்டர். வி. ஜி. என். பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் கைனூர் ஊராட்சி கிராமத்தில் நல்ல காற்றோட்டத்துடன் இயற்கை சூழலில் அமைந்துள்ள டாக்டர். வி. ஜி. என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40ம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் மாநில செயல் தலைவர் வி.மோகன் நாயுடு அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார் சிறப்பு விருந்தினராக இருதய நோய் சிறப்பு மருத்துவர் எஸ்கேஎம் சர்ஜன் பாஷா அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மழலையர், மழலை செல்வங்களுக்கு பட்டமளித்து மாணவர்களை ஊக்குவித்தும் சிறப்பு உரையாற்றினார் முன்னதாக விழாவிற்கு பள்ளியின் தலைவர் டிஆர்.சுப்பிரமணியம் நாயுடு, துணைத் தலைவர் சிஜிஎன். எத்திராஜூலு நாயுடு அவர்கள் தாளாளர் ஜிடிஎன்.அசோகன் நாயுடு, இணை தாளாளர் பிஜிகே சரவணன் நாயுடு செயலாளர் . டி.எஸ். முரளி நாயுடு பொருளாளர் கே.மோகன் ரங்கசாமி நாயுடு மற்றும் இயக்குனர்கள் ஆர்பி.ரவிக்குமார் நாயுடு ஆர். மகேஷ் நாயுடு ஜீகே பாபுஜி , நாயுடு ஏவி. ரகு நாயுடு எம். பாபு நாயுடு ஆகியோரின் முன்னிலை வகித்தனர் முதல்வர் டாக்டர். வ வனிதா சாய்ராம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் மேலும் விழாவில் இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக