குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடும்ப கூடல் விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1954 55 ஆம் ஆண்டு 6. வகுப்பு பயின்ற மாணவர்களின் 71 .ஆம். ஆண்டு குடும்ப கூடல் விழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு. சொக்கலிங்கம் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். விநாயகம் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். ஜி. எஸ். அரசு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார்.
விழா மலரை வெளியிட்டு தலைமை உரை ஆற்றிய. முனைவர். ஜி. விஸ்வநாதன் வி. ஐ. டி. பல்கலைக்கழக வேந்தர்,நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி மற்றும் முன்னாள் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் .கே.ராஜேந்திரன்,ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வேலூர் மாவட்ட தமிழ் சங்கம் செயலாளர் முனைவர். பா. சம்பத்குமார் நிகழ்ச்சியை . நெறியாளர் செய்தார்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்.




கருத்துகள்
கருத்துரையிடுக