வடகலை ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மாசிமக உற்சவம்!!
புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் மார்கெட் எதிரில் அருள்பாலித்து வரும் வடகலை ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் மாசிமக உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி அங்கிசாத்தி தீபாராதனைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. திரளாக பக்தர்கள்கலந்து கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின்
அனுக்கிரகம் பெற்றுச் சென்றனர்.உபயதாரர்கள்அரிமழம் மீனாட்சிபுரம் ரோடு,ஆர்எம்.செல்லப்பன் (என்ற )சீனிவாசன் வள்ளிக்கண்ணு ஆட்சி குடும்பத்தார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக