மதுரையில் குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்!!
மதுரை பெரியார் பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே குடிநீர் குழாய் உடைந்து தினசரி ஆயிரம் லிட்டருக்கு மேல் குடிநீர் தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் மதுரையில் பல பகுதிகளில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது குடிநீர் குழாய் உடைப்பை பற்றி குடிநீர் வாரியத்திடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை தமிழ்நாடு அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக