திண்டுக்கல்லில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை!!
திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.*
இமாம் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகையில், உலக அமைதிக்காகவும், சகோதரத்துவத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
தொழுகை நிறைவுற்றதும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக