குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி உள்ள பயனாளிகளுக்கு . சுமார் 7.கோடியே.48 லட்சத்து.80. ஆயிரம்.நல திட்டங்கள் வழங்கும் விழா! ஆர். எஸ் . சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அமுலு விஜியன் மாவட்ட வருவாய் அலுவலர். சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித்தலைவர்.வே.இரா. சுப்புலட்சுமி IAS அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர். சித்ரா ஜனார்தனன், பேர்ணாம்பட்டு நகர மன்ற தலைவர். பிரேமா வெற்றிவேல். பேரணாம்பட்டு நகர மன்ற துணைத் தலைவர். ஆலியார் ஜூபேர். அகமத் ஒன்றிய குழு துணைத் தலைவர். லலிதா டேவிட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகள் 366 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் 717 நபர்களுக்கு குடும்ப அட்டை உள்ளிட்ட.7.கோடியே 48.80.000. மதிப்பீட்டில் நல திட்டங்கள் வழங்கப்பட்டது.
சைனகுண்டா. கல்லபாடி.. தாட்டிமாணபல்லி ரங்க சமுத்திரம் கருணை சமுத்திரம் பேரணாம்பட்டு.சீவூர்அகரம் சேரி பகுதியிலுள்ள . பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டது.
இறுதியில் வட்டாட்சியர் சந்தோஷ் குமார் நன்றி உரையாற்றினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக