சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசித் தேர்திருவிழா!!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் மாசி திருவிழாவில் 9 ம் நாள் நிகழ்ச்சியாக மார்ச் 1 ம் தேதி நேற்று மாலை 4 மணியளவில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கோயில் மற்றும் கோயில் குளத்தை சுற்றி உள்ள சாலை வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கல்லல் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தேரோட்டத்தை கண்டு களித்தனர்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.


கருத்துகள்
கருத்துரையிடுக