வாக்காளர் விழிப்புணர்வு மாபெரும் கிரிக்கெட் திருவிழா!!
183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.அபிநயா அவர்கள் தலைமையில் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ,தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என 8 அணிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற முதல் இரண்டு அணியினருக்கு பரிசு கோப்பை மற்றும் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மெடல் வழங்கி பாராட்டப்பட்டது.
மேற்படி போட்டியில் அறந்தாங்கி வட்டாட்சியர் கவியரசு , ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் சிவகுமார்,மணமேல்குடி வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங் , ஆவுடையார் கோயில் தனி வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் ஆவுடையார்கோவில் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், அறந்தாங்கி தேர்தல் துணை துணை வட்டாட்சியர் சக்கர பாண்டியன்,அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் , மணமேல்குடி தாலுகாவைச் சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்



கருத்துகள்
கருத்துரையிடுக