ஆலங்குடி அருகே வாணக்கன்காட்டில் முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வீரக்குடி நாடு வாணக்கன்காடு கிராமத்தில் பிரசித்து பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 62 -ஆம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை கோவில் முன்பாக நடைபெற்றது. பெண்கள் ஐந்து முக விளக்கில் தீபம் ஏற்றி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க குடும்பத்தில் அனைத்து தீங்கும் விளகி சுபிட்சமாக அனைத்து செல்வங்களும் பெற்று விவசாயம் செழிக்கவும், வியபாரம் வளரவும் படிப்பு தொழில் வளம் சிறக்கவேண்டி சுவாமிக்கு
மலர் அர்ச்சனை குங்கும அர்ச்சனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வாணக்கன்காடு வீரக்குடிநாட்டு கிராம இளைஞர்கள் அம்மன் விழாகுழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக