அறந்தாங்கி அருகே கல்லனேந்தல் கிராமத்தில் நடைபெற்ற ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கோவில் நாடக மேடை அடிக்கல் நாட்டு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஐந்தாண்டு காலங்கள் முடிவுரை உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள கல்லனேந்தல் முத்துமாரியம்மன் ஆலயத்தின் நாடக மேடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அந்தப் பணிகளை தொடங்கு வதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் நிதி ஒதுக்கி புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக