தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்டம், கோகிலாபுரம் மற்றும் இராயப்பன்பட்டி பகுதிகளில் இன்று கொடி அணிவகுப்பு!!
தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை பாதுகாப்பாக நிலைநிறுத்தவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்டம், கோகிலாபுரம் மற்றும் இராயப்பன்பட்டி பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.ஜெரால்டு அலெக்சாண்டர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு (Flag March) மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக