குடியாத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொது தேர்தலில் . மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க கோரி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொது தேர்தலில் . மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க கோரி விழிப்புணர்வு ஊர்வலம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணியை வட்ட . வழங்கல் அலுவலர். ராமலிங்கம் துவக்க வைத்தார்.
தலைமையிடத்து துணை வட்டாட்சியர். தனலட்சுமி வரவேற்றார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக இளநிலை மறுவாழ்வு அலுவலர். இனியன், பார்த்தசாரதி.
மாற்றுத்திறனாளிகள். கலைவாணன், அன்பழகன், பிரகாசம், கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
குடியாத்தம் செய்தியாளர் . கேவி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக