குடியாத்தத்தில் தேர்தல் நடத்தை விதி முறையில் சுமார் ரூ.1.85. லட்சம் பறிமுதல்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் விதி முறையின் கீழ் இன்று காலை ஆந்திர மாநிலம். பலமனேர் பகுதியில் வசிக்கும் விசுவநாதர் என்பவர் வியாபார சம்பந்தமாக ரூபாய் ஒரு லட்சத்து 85 ஆயிரம் பணத்துடன் வேலூர் சென்றுள்ளார்.
அப்போது சித்தூர் கேட் பகுதியில் பறக்கும் படை.2. பேர்ணாம்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர். லட்சுமி தலைமையில் சுந்தரேசன்.SSi சரிதா.WHC வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர். சந்தோஷ் குமார் ஆகியரிடம் பணம் ஒப்படைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக