தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொது தேர்வு!!
தமிழ் நாடு அரசு மேல்நிலை பள்ளி போதுதேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்த வகையில் மிக எளிமையாக வினா தாள் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் முழு மதிப்பெண் எடுக்கும் வகையில் இருந்தது. நெடு வினாக்கள் அடிக்கடி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளாக இருந்தன. ஆசிரியர்களின் மாதிரி பயிற்சிகள் மிக உறுதுணையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தமிழ் தேர்வில் கண்டிப்பாக நூற்றுக்குக்கு நூறு மதிப்பெண் எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர். கவிப்பிரியா

கருத்துகள்
கருத்துரையிடுக