எல்பிஜி அளவு 10 கிலோவாக குறைப்பு? – மத்திய அரசு பரிசீலனை!!
ஹார்முஸ் நீரிணை நெருக்கடியால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், எல்பிஜி விநியோகத்தில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கடல் வழி எரிவாயு கப்பல் போக்குவரத்து தடங்கலுக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், உள்நாட்டு விநியோகத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் சிலிண்டர் நிரப்பும் அளவை 10 கிலோவாக குறைக்கும் வாய்ப்பு ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த நடவடிக்கை, கிடைக்கும் எல்பிஜி கையிருப்பை அதிகபட்சமாக பயன்படுத்தி, அதிகமான பயனாளர்களுக்கு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக