மேல் குமாரமங்கலம் மயான காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மேல் குமாரமங்கலம் இடுகாட்டில் அமைந்துள்ள மயான காளியம்மன், மயான வீரன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு இரண்டாம் கால பூஜைகள், மகா தீபாரதனை நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகிவிமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக