குடியாத்தம் பள்ளிகள் அருகே மாணவிகளை. கேலி செய்த இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம், நகர பகுதியில் அரசு மற்றும் மகளிர் பள்ளிகள். மற்றும் தனியார் பள்ளிகள் பஸ் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களை சில இளைஞர்கள் கேலி கிண்டல் செய்வதாகவும் மற்றும் பைக் மூலம் சென்று ஹரனடித்து துன்புறுத்துவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது யூ டி சிங் ஐ கண்காணிக்க போலீஸ் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி கண்காணிக்க உத்தரவிட்டார் அதன்படி யூ டி சிங் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் நேற்று குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள மகளிர் மற்றும் அரசு நிதி உதவி பள்ளி அருகில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு அவ்ழியாக செல்லும் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் லில் ஈடுபட்ட 10 இளைஞர்களை கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் மேலும் அவர்களிடம் இருந்த பைக் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் பெற்றோர்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக