நீண்ட நாட்களாக பட்டா வழங்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தருணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக உரிய பட்டா வழங்காததால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் சமூக ஆர்வலர் அப்தாகீர் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் கோட்டாட்சியரின் உதவியாளர் பேச்சுவார்த்தை செய்து அவர்கள் அனைவரையும் கோட்டாட்சியர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பேசிய கோட்டாட்சியர் உங்களுடைய குறைகளை அனைத்தையும் மனுவாக எழுதி என்னிடம் தாருங்கள் நான் ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுத்து உரிய பட்டாவை வழங்குகிறேன் என்று கூறியதை அடுத்து தரர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக