அரங்கினாம்பட்டி ஊராட்சி தபசுமலை கிராமத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தைப்பூச திருநாளை முன்னிட்டு தபசுமலை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய வெற்றி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
பல்வேறு ஊர்களில் இருந்து 24-அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் வெற்றிக் கோப்பைகளை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து Ex.MLA., வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் தபசுமலை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக