குடியாத்தம் நடுப்பேட்டை அருள்மிகு காசி விஸ்வநாதர். திருக்கோவிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர். திருக்கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சங்கர் செட்டியார் மற்றும் குருக்கள் சந்திரசேகர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக