குடியாத்தத்தில் கார் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் புதிய மேம்பாலம் செல்லும் சாலை வளைவில் கல்லூறை சேர்ந்த ஜெயக்கொடி மகன் பாலிடெக்னிக் படித்து. வருகிறார் . இவர் இருசக்கர வாகனத்தில் சென்று மேம்பாலத்தில் கீழிருந்து வளைய முற்பட்ட பொழுது அப்பொழுது அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த மாணவனை இடித்து விட்டு நிற்காமல் தப்பி சென்றது
தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். மேலும் கல்லூரி மாணவனை இடித்து விட்டு சென்ற கார் மற்றும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணம் போதிய வெளிச்சம் இல்லாததால் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக