ஜக்கிய விவசாயிகள் சங்கம் பேரணியில் கலந்து கொண்ட அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் தலைவர் டாக்டர். சிவக்குமார்!!
கன்னியாகுமரி: ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்ற இயக்கம் சார்பில் இன்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி தொடங்கியது,இந்த பேரணியில் ஜக்ஜித் சிங் டல்லேவால்,பி ஆர் பாண்டியன், அய்யாக்கண்ணு,வின்ஸ் ஆன்டோ போன்ற விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர், இவர்களுக்கு அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநிலத் தலைவரும், நிறுவனருமான டாக்டர். சிவகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் மாநில பொருளாளர் அமலன்கோஸ்கா கலந்து கொண்டார்.
காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் அன்னாரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேரணியை தொடங்கினர்,இந்த பேரணி மார்ச் 19ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பேரணியாக காஷ்மீர் சென்று நிறைவடையும் என தெரிவித்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி



கருத்துகள்
கருத்துரையிடுக