தமிழ்நாடு அரசு அலுவலர்.த. பார்த்தசாரதி அவர்களின் செய்தி அறிக்கை!!
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் த.பார்த்தசாரதி அவர்களின் செய்தி அறிக்கை!
இச்செயர்க்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், வட்ட கிளை தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்கத் தலைவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 21.02.2026 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
இக்கூட்டம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தானைத் தலைவர் சிவ. இளங்கோ அரங்கத்தில் பழனி ரோடு, திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய வட்ட கிளைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புதல்
2026 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை புனிதப்படுத்தி நிறைவு செய்தல்
மற்றும் மாவட்ட ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
மாவட்ட தலைவரால் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் மாவட்ட ஒன்றியத்தின் எதிர்கால செயல்திட்டங்கள்,
மாவட்டத் தலைவரால் முன்வைக்கப்படும் முக்கிய அறிவிப்புகள்
ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட தலைவர் த. பார்த்தசாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக