நமணசமுத்திரத்தில் நடைபெற்ற சனி மஹாபிரதோஷ வழிபாடு!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி காடேஸ்வரி ஆலய காஞ்சி பெரியவர் வழிபட்ட சிவாலயத்தில் சனி மஹா பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பால்,தயிர், தேன், சீயக்காய் விபூதி, புனிதநீர் உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிவபெருமானுக்கு அபிஷகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த சிறப்பு வழிபாட்டில் நமணசமுத்திரம், சிவபுரம், தேக்காட்டூர், அரசந்தம்பட்டி, தேமுத்துப்பட்டி, குலமங்கலம், குழிபிறை, நற்சாந்துபட்டி, வலையன் வயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை நமணசமுத்திரம் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி காடேஸ்வரி ஆலய காஞ்சி பெரியவர் வழிபட்ட சிவாலயத்தில் சனி மஹா பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பால்,தயிர், தேன், சீயக்காய் விபூதி, புனிதநீர் உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிவபெருமானுக்கு அபிஷகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த சிறப்பு வழிபாட்டில் நமணசமுத்திரம், சிவபுரம், தேக்காட்டூர், அரசந்தம்பட்டி, தேமுத்துப்பட்டி, குலமங்கலம், குழிபிறை, நற்சாந்துபட்டி, வலையன் வயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை நமணசமுத்திரம் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக