எவ்வளவு.. ஆயிரம் ., ரெண்டாயிரமில்லே .. பத்தாயிரம்!!
விலைவாசி உயர்வு மற்றும் வரி அதிகரிப்பால் திணறி வரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சொத்துவரி, வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி என அனைத்தும் உயர்ந்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சாடிய அவர், மக்களின் குடும்பச் சுமையைக் குறைக்க இந்த நிதி உதவி மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடியின் இந்த 'பத்தாயிரம் ரூபாய்' அறிவிப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக