குடியாத்தத்தில் அத்தி மருத்துவமனை சென்னை அப்போ லோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கார்த்தி கேயபுரத்தில் அமைந்துள்ள அத்தி மருத் துவமனை மற்றும் சென்னை அப்போ லோ மருத்துவமனை இணைந்து மா பெரும் கல்லீரல் மற்றும் வயிற்று சமந்தமான பிரச்சனைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்திமருத்துவமனையின் தலைமை மருத்து வர் மற்றும் சிறுநீரவியல் நிபுணர் டாக்டர் பெ சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி முகாமை துவக்கினார்.
மேலும் சென்னை அப்போலோ மருத்து வமனையின் மருத்துவர் டாக்டர். லோக நாதன் MD அவர்கள் பைப்ரோ ஸ்கேன் மூலம் மருத்துவ பயனாளிகளை பரி சோதித்து வயிற்று மற்றும் கல்லீரல் சமந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வை யும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை யும் கொடுத்து இலவச மருந்தையும் வழங்கினார். அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர். ஆ. கென்னடி அவர்கள் முன்னிலை வகித்து சிகிச்சை அளித்தார். இதில் குடியாத்தம் பாலிடெக் னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல், அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். பால்ராஜ் சீனித்துரை, மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தி மருத்துவமையின் நிர்வாக அதிகாரி சரவணன் ஆகியோர் உடனி ருந்தனர். முகாமில் சுமார் 250 மருத்துவ பயனாளிகள் பயனடைந்தனர். அத்தி கல்வி குழுமத்தின் அறங்காவலர் டாக்டர். சௌ . சுகநாதன் அவர்கள் முகாமை ஒருங்கிணைத்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக