திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கத்தில் நடைபெற்ற யாதவ சமூதாய ஆலோசனைக்கூட்டம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கத்தில் யாதவ சமூதாய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில்எஸ்.கே.டி.சிஅசோகன்,புஷ்பராஜ், பன்னீர் செல்வம்,சுகுமார், தலைமை தாங்கினர்.
அருள் பிரகாஷ்,மண்ணாங்கட்டி, அழகு ரகோத்,சின்னத்தம்பி, தாஸ், செல்வபதி, சரவணன், பிரஸ் அழகிரி முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் யாதவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோரில் யாதவ சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு,
கால்நடை, பால்வளத்துறைகளுக்கு வாரியம் அமைத்து யாதவர்களை தலைவராக நியமிக்க வேண்டும். மார்ச் மாதம் யாதவ சமுதாயத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னுசாமி யாதவ், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். சுரேஷ், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். நவநீத கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். நிரேஷ்குமார், முக்கியஸ்தர்கள் அரும்பாக்கம் ஏழுமலை யாதவ், ராமதாஸ் மெய்யூர், நரியந்தல் மாதவன், அரும்பாக்கம் பாவாடை யாதவ், அத்தியந்தல் கோவிந்தன், ஆதிச்சநல்லூர் தங்கராஜ், பிரசாந்த், அரும்பாக்கம் மாணிக்கம், கண்ணாயிரம், சதிஷ் (மாப்பிளை) பாலாஜி , யுவராஜ், கலந்து கொண்டனர். முடிவில் ராஜி நன்றியுரையாற்றினர்.
திருக்கோவிலூர் புகைப்பட கலைஞர் விஜய்.





கருத்துகள்
கருத்துரையிடுக