சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி திருவிழா!!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்ரவரி 21 ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.இன்று ஏழாம் நாள் விழாவில் திருவீதி உலா நடைபெற்றது. ஸ்வாமி சுந்தரஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் தம்பதி சமேதரராக பட்டாடை சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்து அருள் பாலித்தார்.
இத்திருவிழாவில் கல்லலை மற்றும் அதன் சுற்றி உள்ள குன்னங்கோட்டை கிராம மக்கள் கோயில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.


கருத்துகள்
கருத்துரையிடுக